தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை நாம் தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இந்நிலையில் இன்று இரவு 11.56 வரை பௌர்ணமி திதி உள்ளதால் நாள் முழுவதும் பௌர்ணமி திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
![]() |
தை பூசம் |
ஆனால் பூசம் நட்சத்திரம் காலை 09.14 மணிக்கே துவங்குகிறது. பௌர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணையும் நாளிலேயே தைப்பூச வழிபாடு செய்ய வேண்டும்.
இதனால் காலை 09.20 முதல் 10.30 வரையிலான நேரத்திலும், மாலை 06.15 முதல் 07.30 வரையிலான நேரத்திலும் தைப்பூச வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானதாகும்.
தைப்பூசத்தன்று வீட்டில் வேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து, வேல் விருத்தம், கந்தர் அலங்காரம் போன்ற பதிகங்களை பாராயணம் செய்து வழிபடுவது மிகவும் உயர்வான பலனை தரும்.