இயற்கை மருத்துவ குறிப்புகள் -2024

  • மார்பு சளி குணமாக – இஞ்சி மற்றும் சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பா சாப்பிடலாம்.
  • ஆஸ்துமா நோய் தீர – சிறுகுறிஞ்சான் வேர்ப்பொடி, திரிக்கடுகு பொடி  வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
  • இதயநோய் குணமாக – மருதம்பட்டை, செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் குடித்து வர வேண்டும்.
  • நுரையீரல் சளி,இருமல் குணமாக – பிரமத்தண்டு இலைப்பொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம்.
  • இருமல் தீர – வெந்தயக் கீரை சமைத்து சாப்பிட வேண்டும்.
  • கக்குவான் இருமல் வேகமாக குறைய – சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
  • இரைப்பு குணமாக – இஞ்சி வெள்ளை எருக்கு, மிளகு சேர்த்து கசாயம் செய்து குடிக்கவும்.
  • நீர்கோவை சளி காய்ச்சல் தீர – அறுகீரையுடன் நெய் சேர்த்து உண்டு வரவும்.
  • உடல் சுறுசுறுப்பாக இருக்க – சுக்கு போடி மதியம் உண்டு வரவும்.
  • வாயு அகல – முடக்கத்தான் இலையை அவிழ்த்து சாறு பிழிந்து ரசமாக ஒரு நாள் உணவோடு கலந்து சாப்பிடவும்.
  • வாய் ரணம்,உதடு நாக்கு ரணத்திற்கு – ஆலம்பாலை தடவி வரலாம்.
  • தொண்டை புண் குணமாக – கிராம்பை கனவில் இட்டு வறுத்து வாயிலிட்டு சுவைக்கவும்.
  • சர்க்கரை வியாதியை உள்ளவர்கள் – கால்களுக்கு இறுக்கமான செருப்பு அணிதல் கூடாது.
  • சர்க்கரை வியாதி குணமாக – தினசரி ஐந்து ஆவாரம்பூ மென்று சாப்பிட வேண்டும்.
  • சர்க்கரை வியாதி தீர – கொன்றை பூ அரைத்து மோரில் சாப்பிட்டு வரலாம்.
  • சர்க்கரை நோய் தீர – அத்திப்பால் வெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும்.
  • சித்திர பிரம்மை தீர – பிரமிய வழுக்கை இலை சாறு உடன் நெய் கலந்து காய்ச்சி காலை மாலை ஒரு கரண்டி சாப்பிடலாம்.
  • சர்க்கரை நோய் தீர – 
  • அறிவு தெளிவு உண்டாக – தூதுவளை இலை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட வேண்டும்.
  • சதை அடைப்பு நீங்க – முதிர்ந்த மருதாணி வேர்ப் பட்டை கசாயம்  சாப்பிட வேண்டும்.
  • ஞாபக சக்தியை பெருக்க – வல்லாரைக் கீரை அரைத்து குடிக்கலாம்.
  • புத்தி கூர்மை உண்டாக – கோரைக்கிழங்கு பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.
  • பித்த நீர் மலத்துடன் வெளியேற – ரோஜாப்பூ கசாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிடலாம்.
  • நகச்சுற்று குணமாக – கொழுந்து வெத்திலை சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்டிவிட நகச்சுற்று குணமாகும்.
  • உடல் நஞ்சு அகல – கருங்குருவை அரிசி சமைத்து சாப்பிடலாம்.
  • தலைவலி நீங்க – குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.
  • திடீரென ஏற்படும் நெஞ்சு வலி குணமாக – கஸ்தூரி மஞ்சள் ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட வேண்டும்.
  • உடல் வெப்பம் நீங்கி புண் ஆற – எழுத்தாணி பூண்டு இலை அரைத்து மலம் போகும் அளவு கொடுக்கவும்.
  • தலைச்சுற்றல் தீர – நெல்லி வற்றல் உடன் பச்சை பயறு சேர்த்து கசாயம்  செய்து காலை மாலை சாப்பிடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top