தமிழ் செழித்து வளர்ந்த விதம் குறித்து தமிழ்விடு தூது கூறும் தகவல்கள்

தமிழ் செழித்து வளர்ந்த விதம்

தமிழே! உமக்குத் தலைமைப் பேறு அளித்தால், உமக்கு ஒப்பாவர் ஒருவருமிலர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் வயலின் வரப்புகளாகவும், துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும் விளங்கின.

தமிழ் செழித்து வளர்ந்த விதம் குறித்து தமிழ்விடு தூது கூறும் தகவல்கள்

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேர் உழவர் உழவு செய்ய, வைதருப்பம், கொடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுன் நன்னெறிகளே விதைகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன விளைபொருள்களாயின. 

இதையும் படிக்க :  சீறாப்புராணம் புலி வசனித்த படலம் 

இப்பயிர்களிடையே வளரும் களைகளாகிய போலிப்புலவர்கள் கூட்டம் பெருகாமல் குட்டுவதற்கு அதிவீரராமபாண்டியனும், செவியை அறுப்பதற்கு வில்லிபுத்தானும் தலையை வெட்டுவதற்கு ஓட்டக்கூத்தனும் இருந்தமையால், தமிழே நீ கிளைத்துச் செழித்து வளர்ந்தாய்,

தமிழே ! பால், முந்திரி, வாழை, கரும்பு. இளநீர்போல் பல்வகையான சுவைகளையும் தருகின்றாய். 

தெளிந்த அமுதமாகவும், மேன்மையான விடுபேற்றை அளிக்கும் களியாகவும், அறிவினால் உண்ணப்படும் தேனாகவும் விளங்கும் தமிழே! உம்மிடத்து மகிழ்ந்து உரைக்கும் ஒரு விண்ணப்பம் உண்டு; கேட்பாயாக,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top