கொடுக்கப்பட்ட சொற்றொடரில் இருந்து வினாக்கள் எழுப்புதல் – தமிழ் இலக்கணத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எந்த சொற்றொடராயினும் அதற்கு ஏற்ற வினாக்கள் அமைக்க முடியும். இதுவே தொடருக்கு ஏற்ற வினா அமைத்தல் என அழைக்கப்படுகிறது.
இப்போது சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் வாருங்கள்!
1) பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெரியார்.
விடை :
பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
2) பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார்.
விடை :
பெரியார் எதை ஏற்க மறுத்தார்?
3. செய்திப் படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்.
விடை :
செய்திப்படங்கள் வாயிலாக நிகழ்வுகளை எங்கு கண்டு களிக்கலாம்?
4) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது.
விடை :
ஒளிஒலிப் படக்கருவியின் பயன் யாது?
5) தமிழர்கள் அரபுநாட்டுடனும், யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
விடை :
தமிழர்கள் எந்தெந்த நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?
6) காந்தியடிகள், பலகோடி மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் கதர் என்று கருதினார்.
விடை :
காந்தியடிகள், பலகோடி மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் என்று எதைக் கருதினார் ?
7) இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், தெய்வப்பற்றும் வளரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
விடை :
கல்வி எவ்வாறு அமைதல் வேண்டும்?
8) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்.
விடை :
பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரத் தகுதி என்ன?
9. தொழில்நுட்பப் பயிலகத்தில் பயில்வோர்க்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
விடை :
எத்துறையில் பயில்வோர்க்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன?
10, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணிகளில் இருபது விழுக்காடு ஒதுக்கித் தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.
விடை :
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் எத்தனை விழுக்காடு ஒதுக்கித் தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது?
11. சென்னையில் உள்ள கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்கர் மனமுருகிப் பாடி மகிழ்வார்.
விடை :
இராமலிங்கர் எந்த இறைவனை மனமுருகிப் பாடி மகிழ்வார்?
12. மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர் காந்தியடிகள் என்பது உலகறிந்த செய்தி.
விடை :
காந்தியடிகள் பற்றி உலகறிந்த செய்தி யாது?
13. காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார்.
விடை :
காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது எதனைக் கண்டார்?
14.தென்னாப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கருப்புச் சட்டங்களைக் காந்தியடிகள் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
விடை :
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணம் என்ன?
15. இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று. மொழிப்பற்று வளரும் வகையில் சுல்வி அமைதல் வேண்டும்.
விடை :
இளைஞர்களின் உள்ளத்தில் கல்வி எவ்வாறு அமைதல் வேண்டும்?
16.ஈகத்தின் (தியாகம்) உச்சியில் நின்றவர் காந்தியடிகள்.
விடை :
காந்தியடிகள் எத்தகைய பண்பில் உச்சியில் நின்றவர்?
17. தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகுபடுத்தி உள்ளனர்.
விடை :
தமிழர், தம் வாழிடங்களை எத்தன்மைக்கேற்பப் பாகுபடுத்தி உள்ளனர்?
18. மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால், அவரின் குடல் சரிந்தது.
விடை :
மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தை குடல் சரியக் காரணம் என்ன?
19. தமிழர்கள் பரந்துபட்ட அறிவியல் சிந்தனை உடையவர்கள்.
விடை :
தமிழர்கள் எத்தகைய சிந்தனை உடையவர்கள்?
20. தமிழர்கள். அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.
விடை :
தமிழர்கள் எவ்வாறு வாணிகம் செய்தார்கள்?
21) தமிழர்களுக்குச் சாவக நாட்டுடனும் கடல் வாணிகத் தொடர்பு இருந்தது.
விடை :
தமிழர்களுக்கு எந்த நாட்டுடன் கடல் வாணிகத் தொடர்பு இருந்தது?
22) மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று.
விடை :
மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கருவியாக அமைந்தது எது?