இயக்குநர் மற்றும் நடிகரான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் முக்கியமான பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனரும், நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் மதுரை மேலூர் தாலுகா பழையூர்பட்டி வீட்டில் மரணம் அடைந்தார்.
84 வயதான அவர் சினிமா ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மரணம் (16-11-23) அடைந்தார்.
இன்று அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடக்கிறது. திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேரன், ‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராஃப்’, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.