வல்லினம் மிகும் இடங்கள் :
இரண்டு சொற்கள் ஒன்றாக சேரும் போது இடையில் க் ,ச் ,த் ,ப் ஆகிய நான்கு மெய்யெழுத்துக்கள் எங்கெங்கு மிகும் என்பது குறித்து அறிவோம்.
அ , இ , உ என்பன சுட்டெழுத்துக்கள். இந்த எழுத்துக்களின் முன் வல்லின எழுத்துக்கள் முதலாக உடைய சொல் வந்து சேர்ந்தால் இடையில் அவ்வெழுத்தின் மெய்யெழுத்து தோன்றும். இதனை வல்லொற்று மிகுதல் என்பர்.
அ + பையன் = அப்பையன்
( அ முன் பை என்னும் பகர வருக்க எழுத்து வந்ததால் ,மெய்யெழுத்தாகிய ப் தோன்றியது .)
அ + சட்டை = அச்சட்டை
இ + தோட்டம் = இத்தோட்டம்
இ + குளம் = இக்குளம்
உ + பக்கம் = உப்பக்கம்
( உ என்னும் சுட்டு எழுத்தானது தற்போது வழக்கத்தில் இல்லை.)
எ என்னும் வினா எழுத்துக்கு முன் வல்லின எழுத்தை முதலாக உடைய சொற்கள் வந்தாலும் வல்லினம் மிகும்.
எ + குடம் = எக்குடம்
எ + சட்டை = எச்சட்டை