TNPSC Group 2 Exam 2024 – பொதுத்தமிழ் வினா விடைகள்

   ( பகுதி – ஆ — பொதுத் தமிழ் )

  

101) நிழல் போலத் தொடர்ந்தான் – இது என்ன உவமை? 

(A) வினை உவமை

(B) பயன் உவமை

(C) வடிவ உவமை

(D) உரு உவமை

(E) விடை தெரியவில்லை 

  விடை : (A) வினை உவமை

102)  பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க எடுப்பார் கைப்பிள்ளை

(A) எதையும் கேட்காதவர்
(B) எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை
(C) யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
(D) எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
103)  ‘அப்துல் நேற்று வருவித்தான்’ எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.
(A) எதிர்மறைவினை
(B) பிறவினை
(C) தன்வினை
(D) உடன்பாட்டுவினை
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) பிறவினை

104. மாணாக்கர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினா என்பதைக் கண்டறிக

(A) ஏவல்வினா
(B) ஐயவினா
(C) கொளல்வினா
(D) கொடைவினா
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) கொடைவினா
105. பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக. பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
(A) பரிவாதினி என்னும் வீணை மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறதா?
(B) பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததா?
(C) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வீணை இருந்ததா?
(D) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும். வீணை எது?
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும். வீணை எது?
106. பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு – ‘உணர்த்தினென்
(A) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
(B) தன்மை பன்மை வினைமுற்று
(C) தன்மை ஒருமை வினைமுற்று
(D) பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) தன்மை ஒருமை வினைமுற்று
107. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக
(A) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
(B) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
(C) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
(D) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
(E) விடை தெரியவில்லை.
  விடை : (D) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
108. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறன் வடிவம் உள்ள தொடரைக் கண்டெழுதுக.
(A) யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது வினைபடு பாலால் செவ்விது ஆங்கு
(B) கணைகொடிது செய்யிது ஆங்கு வினைபடுயாழ்கோடு அன்ன பாலால் கொளல்
(C) செவ்விது ஆங்கு அன்ன கணைகொடிது யாழ்கோடு, வினைபடு பாலால் கொளல்
(D) கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அள்ள வினைபடு பாலால் கொளல்
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அள்ள வினைபடு பாலால் கொளல்
109. அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்
(A) தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை
(B) தவப்பெருஞ்சுடர், திருவிளக்கு, தாய்போல், தீவினை, துன்பங்கள், தூய்மை (C) தாய்போல், தவப்பெருஞ்சுடா, தீவினை, திருவிளக்கு, துன்பங்கள் தூய்மை
(D) தூய்மை, துன்பங்கள், திருவிளக்கு, தீவினை, தாய்போல், தவப்பெருஞ்சுடர்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (A) தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை
110. வேர்ச்சொல் கண்டறிக. நைந்தான்
(A) நஞ்சு
(C) நஞ்சன்
(B) நைந்து
(D) ஐந்து 
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) நைந்து
111. ‘படி‘ என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.
(A) படிக்கிறேன்
(C) படிப்போம்
(B) படித்தேன்
(D) படிப்பேன் 
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) படிப்பேன் 
112. சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.
(A) தே- தேடுதல்
(B) மீ -வான்
(C) ஏ- ஏற்றம்
(D) நா- நான் 
(E) விடை தெரியவில்லை 
  விடை : (B) மீ -வான்
113) ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையை தேர்வு தெரிவு செய்க.
a) பை.       1.  உண் 
b) மே.         2. புல் 
c) வை.       3. அன்பு 
d) து.           4. இளமை 

       (a).  (b).  (c).  (d) 
(A). 1.     3.     4.    2. 
(B).  3.    4.      1.   2
(C).  1.    2.      3.   4 
(D). 4.    3.      2.    1
  விடை : (D). 4. 3. 2. 1


114. பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க. ‘Renaissance’

(A) மீட்டுருவாக்கம்
(B) மறுசுழற்சி
(C) மறுமலர்ச்சி
(D) மீள்சிந்தனை
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) மறுமலர்ச்சி
115. பிழையான இணையைக் கண்டறிக.
(A) கல்லில் நார் உரித்தல் – நீண்ட காலமாக இருப்பு
(B) ஆயிரங்காலத்துப் பயிர் – ஆராய்ந்து பாராமல்
(C) கானல்நீர் – இல்லாத ஒன்று
(D) கம்பி நீட்டுதல் – விரைந்து வெளியேறுதல்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (A) கல்லில் நார் உரித்தல் – நீண்ட காலமாக இருப்பு
116. சந்திப்பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுத்து எழுது
(A) உற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் ப பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்ற
(B) கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலை பகுதிகளில் மலை. பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
(C) கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதியில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவு தொழிலும் நடைபெறுகின்றன.
(D) கடற்கரையில் உப்புக் காய்க்கதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
(E) விடை தெரியவில்லை 
  விடை : (D) கடற்கரையில் உப்புக் காய்க்கதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
117. தவறான இணையைக் கண்டறிக.
(A) முரணி – உடன்பட்டு 
(B) பள்ளகம் -பாம்பு
(C) தகம் – மலை
(D) கெந்தம் பற்கள்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (A) முரணி – உடன்பட்டு  
118. பொருத்துக.

(a) முல்லைப்பாட்டு – 1. நறுந்தொகை

(b) பட்டினப்பாலை – 2. வேளாண்வேதம்

(c) நாலடியார் – 3. வஞ்சி நெடும்பாட்டு

(d) வெற்றிவேற்கை– 4. நெஞ்சாற்றுப்படை

       (a)  (b)  (c)  (d)
(A)  2     3     4      1
(B) 4      3      2     1
(C) 3      4      1     2
(D) 2      1      4    3

(E) விடை தெரியவில்லை

  விடை : (B)  4  3  2 1

119. பொருத்துக:

(a) தமிழ்த்தூதர் – 1. திருஞானசம்பந்தர்

(b) பாலறாவாயன் – 2. அப்பாதுரையார்

(c) பன்மொழிப் புலவர்- 3.ரா.பி.சேதுப்பிள்ளை

(d) சொல்லின் செல்வர் – 4. தனிநாயகம் அடிகள்


          (a)  (b)  (c)  (d)
(A)    4      1      2     3
(B)     1     2      3     4
(C)     4     3      2     1
(D)    3      4      1     2
(E) விடை தெரியவில்லை
  விடை : (A)  4  1  2  3

120. ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
(A) சிவஞான முனிவர்
(B) மயிலைநாதர்
(C) ஆறுமுகநாவலர்
(D) இளம்பூரணர்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (B) மயிலைநாதர்
121. “திராவிடம்” என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டனர்.
(A) வீராஸ் பாதிரியார்
(B) அகத்தியலிங்கம்
(C) குமரிலபட்டர் 
(D) ஹோக்கன் 
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) குமரிலபட்டர் 
122. நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது
(A) தஞ்சை பெரிய கோயில்
(B) இராமேசுவரம் பெருங்கோயில்
(C) திருச்சி திருவரங்கக் கோயில்
(D) காஞ்சி பெரிய கோயில்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) இராமேசுவரம் பெருங்கோயில்
123. ‘தேவதுந்துபி’ எந்த ஆட்டத்துக்குரிய இசைக் கருவி?
(A) மயிலாட்டம்
(B) ஒயிலாட்டம்
(C) தேவராட்டம்
(D) காவடியாட்டம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) தேவராட்டம்
124. “புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு சுனிமொழிபேசி நீ களித்திருக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே இருந்தேன்“, என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்
(A) முத்தமிழறிஞர் கலைஞர்
(B) பேரறிஞர் அண்ணா
(C) மூதறிஞர் இராசாசி
(D) மு.வரதராசனார்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (B) பேரறிஞர் அண்ணா
125. “குமரிகண்ட நோய்க்குக் குமரி கொடு” இத்தொடரில் ‘குமரி‘ என்னும் மூலிகை
(A) கறிவேப்பிலை
(B) குப்பைமேனி
(C) தூதுவளை
(D) கற்றாழை
(E) விடை தெரியவில்லை
  விடை :  (D) கற்றாழை 
126.பொருத்துக

(a) அன்னை முத்துலெட்சுமி – 1. தேவதாசி ஒழிப்புச் சட்டம்

(b) மூவலூர் இராமாமிர்தம் – 2. சமூகத் தன்னார்வலர்

(c) பண்டித ரமாபாய் – 3. பெண் கல்வி

(d) மலாலா – 4. புற்றுநோய் மருத்துவமனை
      (a)  (b)  (c)  (d)
(A)  1    2     3    4
(B)  1    3     2    4
(C)  4    1      2    3
(D) 3     2     4    1
(E) விடை தெரியவில்லை
  விடை :  (C)  4     1    2   3
127. தமிழ் இலக்கியத்தில் ‘ஆலவாய்‘ என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.
(A) நெல்லை
(B) திருச்சி
(C) மதுரை
(D) காவிரிப்பூம்பட்டினம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) மதுரை 
128, ஆங்கில அரசால், ‘வாய்ப்பூட்டுச் சட்டத்தின்‘ மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?
(A) பெரியார்
(B) ம.பொ. சிவஞானம்
(C) முத்துராமலிங்கனார்
(D) ப. ஜீவானந்தம்
(E) விடை தெரியவில்லை
  விடை :   (C) முத்துராமலிங்கனார் 
129. இன்று நான் உணர்கின்றோம் தம்பி! எத்தளை இன்னலுக்கிடையிலே தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புது நாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு” என்று உரையாற்றியவர்
(A) பேரறிஞர் அண்ணா
(II) ரா.பி. சேதுப்பிள்ளை
(C) மகாத்மா காந்தியடிகள்
(D) மு.வரதராசனார்
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) பேரறிஞர் அண்ணா 
130. சென்ரியு மற்றும் லிமரைக்கூ என்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகள் தந்தவர்
(A) கவிக்கோ அப்துல் ரகுமான்
(3) கவிவேந்தர் மு. மேத்தா
(C) கவிஞர் ஈரோடு தமிழன்பன்
(D) இரவீந்திரநாத் தாகூர்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) கவிஞர் ஈரோடு தமிழன்பன் 
131. ‘பாவலர் மணி’ என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்
(A) உவமைக் கவிஞர் சுரதா
(B) பாவேந்தர் பாரதிதாசன்
(C) கவிஞர் வாணிதாசன்
(D) கவிஞர் முடியரசன்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) கவிஞர் வாணிதாசன் 
132. “தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்று _________ குறித்து ________ கூறினார்.
(A) சங்க இலக்கியம் – குமரிவபட்டர்
(B) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு உவே. சாமிநாதர்
(C) புறநானூறு – பரிதிமாற்கலைஞர்
(D) நன்னூல் – ஜி.யு. போப்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு உவே. சாமிநாதர்
133, ஜெயகாந்தன் இயற்றாத சிறுகதை எது?
(A) குருபீடம்
(B) அறம்
(C) யுகசந்தி
(D) புதிய வார்ப்புகள்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) அறம்
134. ஆண்மையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?
(A) வறியவருக்கு உதவுதல்
(B) பகைவருக்கு உதவுதல்
(C) நண்பனுக்கு உதவுதல்
(D) உறவினருக்கு உதவுதல்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) பகைவருக்கு உதவுதல்
135, ஒழுகல் -இலக்கணக் குறிப்பு தருக.
(A) தொழிற்பெயர்
(B) வினையெச்சம்:
(C) வினையாலணையும் பெயர்
(D) பண்புத்தொகை
(E) விடை தெரியவில்லை.
  விடை : (A) தொழிற்பெயர்
136. திருக்குறளின் சரியான வரியை கொண்டு நிறைவு செய்க.
‘தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
(A) வன்மையுள் எல்லாம் தலை
(B) கெடுக்குந் தகைமை யவர்
(C) பேணித் தமராக் கொளல்
(D) பெற்றியார்ப் பேணிக் கொளல் 
(E) விடை தெரியவில்லை.
  விடை : (A) வன்மையுள் எல்லாம் தலை
137. கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்முன் நிறுத்தும் சந்தம்
(A) வில்லை மாறி, மாறி, எய்வதால் வரும் ஓசை
(B) மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசை
(C) உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை
(D) மத்தளங்களின் இடி இசை
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை
138. பின்வரும் பாடல் எந்த படிம் வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவற்றை எடுத்தெழுதுக.  

யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பின் தோன்றும்”
                                         – (அகம் 391: 11-12)
(A) வினைப்படிமம்
(B) மெய்ப்படிமம்
(C) பயன்படிமம்
(D) உருப்படிமம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) மெய்ப்படிமம்
139. கலித்தொகையில் முல்லைத் திணைக்குரிய பாடல்களை இயற்றியவரைத் தெரிவு செய்க.
(A) நல்லந்துவனார்
(B) சோழன் நல்லுருத்திரன்
(C) சேரமான் பெருங்கடுங்கோ
(D) இளநாகனார்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) சோழன் நல்லுருத்திரன்
140. ‘சிதவல்‘ -இச்சொல்லின் பொருள்.
(A) முரசம்
(B) ஊன்றுகோல்
(C) சோம்பல்
(D) தலைப்பாகை
(E) விடை தெரியவில்லை 
  விடை : (D) தலைப்பாகை
141. சீறாப்புராணம் இவருடைய உதவியால் நிறைவுற்றது
(A) அப்துல் காதிர்
(B) வள்ளல் சீதக்காதி
(C) அப்துல் சமத்
(D) அபுல்காசிம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) அபுல்காசிம்
142. இரண்டிரண்டு அடிகள் கொண்ட வகை கண்ணி ஆகும். யால் தொடுக்கப்படும் செய்யுள்
(A) மோனை
(B) எதுகை
(C) இயைபு 
(D) ஒரூஉ 
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) எதுகை
143. பொருத்துக:

(a) விசும்பு – 1.தந்தம்

(b) துலை – 2.நெருப்பு

(c) கனல் – 3.யானை

(d) களிறு – 4.வானம்

(e) மருப்பு – 5. துலாக்கோல்
     ( a)  (b)  (c)  ( d)  (e)
(A)  4    5     2      3    1
(B)  3    2     1      4    5
(C)  4    3      2     1     5
(D)  2   1      5     4      3
(E) விடை தெரியவில்லை
  விடை : (A)  4  5  2 3  1
144. கீர்த்தனை __________ வகைகளுள் ஒன்றாகும்.
(A) சங்க இலக்கியம்
(B) நீதி இலக்கியம்
(C) பக்தி இலக்கியம்
(D) சிற்றிலக்கியம்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (D) சிற்றிலக்கியம்
145. ‘தெம்மாங்கு‘ -பிரித்தெழுதுக.
(A) தென் + பாங்கு
(C) தேன் – மாங்கு
(E) விடை தெரியவில்லை
(B) தென் – மாங்கு
(D) தேன் – பாங்கு
  விடை : (D) தேன் – பாங்கு 

146. ‘எள்ளில் தைலம்போல் எங்கும் நிற்கை பொருளை உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே ! ‘

இப்பாடலடிகளை இயற்றியவர் சித்தர் யார்?
(A) குதம்பைச் சித்தர்
(B) இடைக்காட்டுச் சித்தர்
(C) பாம்பாட்டிச் சித்தர்
(D) திருமூலர்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) இடைக்காட்டுச் சித்தர்
147.”திருப்பல்லாண்டு“பாடியவர்
(A) குலசேகராழ்வார்
(B) ஆண்டாள்
(C) பெரியாழ்வார்
(D) திருப்பாணாழ்வார்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) பெரியாழ்வார்
148. தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களைக் கொண்ட சைவ அடியார்.
(A) திருநாவுக்கரசர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) திருநாவுக்கரசர்
149. ‘தமிழ் மூவாயிரம்‘ என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
(A) நாவுக்கரசர்
(B) நக்கீரர்
(C) திருமாளிகைத்தேவர்
(D) திருமூலர்  
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) திருமூலர்
150. ‘காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்’ இத்தொடர் உணர்த்துவது
(A) கவிதை எழுதுவது எளிது
(B) கவிதை எழுதுவது அரிது
(C) கவிதை எழுதக் காரிகைத் தேவையில்லை
(D) பேரிகை கொட்டினால் பிழைக்கலாம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) கவிதை எழுதுவது அரிது
151. ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
(A) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(B) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
(C) ஆலும் வேலும் பல்லுக்குறுதி
(D) நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
152. “பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி”, இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை
(A) முற்றெதுகை
(B) கீழ்க்கதுவாய் எதுகை
(C) பொழிப்பெதுகை
(D) ஒருஉ எதுகை
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) பொழிப்பெதுகை
153.  ‘அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினாள்‘ எவ்வகை வாக்கியம்? 
(A) செயப்பாட்டுவினை
(B) செய்வினை
(C) பிறவினை
(D) தன்வினை
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) தன்வினை
154. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. ‘நான் திடலில் ஓடினேன்’
(A) கட்டளை வாக்கியம்
(B) செய்வினை
(C) தன்வினை
(D) வினையெச்ச வாக்கியம்
(E) விடை தெரியவில்லை
  விடை :  (C) தன்வினை
155. பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.

குமரன் மழையில் நனையாமல் இல்லை’
(A) செய்தித் தொடர்
(B) எதிர்மறைத் தொடர்
(C) பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்
(D) கட்டளைத் தொடர்
(E) விடை தெரியவில்லை  
  விடை : (C) பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்
156, வஞ்சித்தளைக்குரிய சீர் அமைப்பு
(A) தேமா புளிமாங்காய்
(B) தேமாங்கனி புளிமாங்காய்
(C) கருவிளம் கூவிளங்காய்
(D) கூவிளங்காய் தேமாங்கனி
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) தேமாங்கனி புளிமாங்காய்
157. சொல்லின் வகையைக் கண்டறிக.

வெண்மை’
(A) தொழிற்பெயர்
(B) இரண்டாம் வேற்றுமை
(C) வண்ணப் பண்புப்பெயர்
(D) ஆகுபெயர்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) வண்ணப் பண்புப்பெயர்
158. வஞ்சி விருத்தம் என்பது
(A) குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருவது
(B) சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது
(C) குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் வருவது
(D) அளவடி பெற்று ஒரு பொருளில் ஒரு செய்யுள் மட்டும் வருவது
(E) விடை தெரியவில்லை 
  விடை : (B) சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது
159. பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நவமணிகளை தெரிவு செய்க
(A) நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைகுசியம், முத்து புஷ்பராகம், மரகதம்
(B) கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
(C) கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
(D) கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
160. வினையெச்சம் கண்டறிக.
(A) ஓடினான்
(B) ஓடும்
(C) ஓடிய
(D) ஓடி
(E) விடை தெரியவில்லை
  விடை : 
(D) ஓடி
161. வினைமுற்றைத் தேர்வு செய்க.
வா
(A) வந்தனன்
(B) வந்து
(C) வந்தான்
(D) வந்த
(E) விடை தெரியவில்லை 
  விடை : (C) வந்தான்
162. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.

மாரி,மாறி
(A) பாதி, பறை
(B) மேளம், ஒலித்தல்
(C) மழை, வேறு
(D) வீடு, ஒலித்தல்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) மழை, வேறு
163. ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க:

(a) அளை – 1. இளைத்தல்

(b) களை – 2. நீக்கு

(c) தளை – 3. புற்று

(d) இளை – 4.விலங்கு
      (a)  (b)  (c)  (d)
(A)  2    3      1    4
(B)  4    1      2    3
(C)  3    2      4    1
(D)  1    2      3    4
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) 3  2  4  1
164, கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.  Delegate (டெலிகேட்) 
(A) வடிவமைப்பு
(B) பேராளர்
(C) குறும்பெட்டி
(D) மரபுத்தகவு
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) பேராளர்
165. கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
அறை’
(A) அறைதல்
(B) அறைந்த
(C) அறைந்தவர்
(D) அறையும்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) அறைந்தவர்
166. இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க
(A) இரவு × பகல்
(B) அகலாது X போகாது
(C) தண்மை X வெம்மை
(D) விருப்பு × வெறுப்பு
(E) விடை தெரியவில்லை.
  விடை : B) அகலாது X போகாது
167. சரியாக பிரித்தெழுதப்பட்ட சொல்லை எடுத்தெழுதுக.
அஞ்சிலோதி
(A) அஞ்சில் + ஓதி
(B) அம் + சிலோதி
(C) அம் + சில் + ஓதி
(D) அம் + சில + ஓதி
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) அம் + சில + ஓதி

168. பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக

ஊன்பொதியவிழா
(A) ஊள் + பொதிய + விழா
(B) ஊன்பொதிய + விழா
(C) ஊன் + பொதி + விழா
(D) ஊன் + பொதி + அவிழா 
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) ஊன் + பொதி + அவிழா 

169. எழுத்துவகை அறிந்து பொருத்துக:

(a) இயல்- 1. உயிர் முதல் உயிரீறு

(b) புதிது – 2. உயிர் முதல் மெய்யீறு

(c) ஆணி – 3. மெய்ம்முதல் மெய்யீறு

(d) வரம் – 4. மெய்ம்முதல் உயிரீறு
         (a)  (b)   (c)   (d)
(A)    2     4      1      3
(B)    2     2      1      4
(C)    1     3      4      2
(D)   1     4       2      3
(E) விடை தெரியவில்லை
  விடை : (A)  2  4  1  3
170. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
(A) கால்டுவெல்
(B) தேவநேயப் பாவாணர்
(C) ம.பொ.சி
(D) உ.வே.சா
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) தேவநேயப் பாவாணர்
171,உவே.சா அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?
(A) துக்ளக்
(B) குமுதம்
(C) கல்கண்டு
(D) ஆனந்த விகடன்
(E) விடை தெரியவில்லை.
  விடை : (D) ஆனந்த விகடன்
172. தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை ‘உயர்தனிச் செம்மொழி’ என்று பெருமைப்படுத்தியவர்.
(A) வ.சுப. மாணிக்கனார்
(B) தேவநேயப் பாவாணர்
(C) மா. இராசமாணிக்கனார்
(D) பரிதிமாற் கலைஞர்
(E) விடை தெரியவில்லை.
  விடை : (D) பரிதிமாற் கலைஞர்
173. வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்க் கவிஞர்
(A) சிதபி
(B) மு.மேத்தா
(C) ந. பிச்சமூர்த்தி
(D) கரதா
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) ந. பிச்சமூர்த்தி 
174. பொருத்துக:

(a) காந்தியக் கவிஞர் – 1. சுரதா

(b) உவமைக் கவிஞர் –  2. நாமக்கல் கவிஞர்

(c) மக்கள் கவிஞர்   -3. வாணிதாசன்

(d) கவிஞரேறு – 4. பட்டுக்கோட்டை
       (a)  (b)  (c)  (d)
(A)   2    1     4      3
(B)   4    3     1     1
(C)    3    2     3     2
(D).  1     2     3     4
(E) விடை தெரியவில்லை
  விடை : (A)  2  1  4  3
175, “பிசிராந்தையார்” எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
(A) பாவேந்தர் பாரதிதாசன்
(B) கவிஞர் வாணிதாசன்
(C) கவியரசர் கண்ணதாசன்
(D) கவிஞர் முடியரசன்
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) பாவேந்தர் பாரதிதாசன்
176, “உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்று கூறியவர்
(A) ஆபிரகாம் லிங்கன்
(B) அறிஞர் அண்ணா
(C) விவேகானந்தர்
(D) கதே 
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) அறிஞர் அண்ணா
177. “மாந்தன் தோற்றமும் தமிழா மரபும்” என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்
(A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) தேவநேயப் பாவாணர்
(D) சோமசுந்தர பாரதியார்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) தேவநேயப் பாவாணர்
178. “சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது காவிரியாறு. அந்நதியின் பெருமையாலேயே சோழவள நாடு சோறுடைத்து என்று கவிகள் புகழ்வாராயினர்” என்று உரை நிகழ்த்தியவர்
(A) திரு.வி. கலியாண சுந்தரனார்
(B) பேரறிஞர் அண்ணா
(C) காமராசர்
(D) ரா.பி. சேதுப்பிள்ளை
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) ரா.பி. சேதுப்பிள்ளை
179. கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.

கூற்று 2 : உலக முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்களுள் இலக்கியங்கள்.

கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.  
(A) கூற்று 1, 2 சரி, 3 தவறு
(B) கூற்று 3, 2 சரி. 1 தவறு
(C) கூற்று 1, 2 தவறு. 3 சரி
(D) கூற்று 2, 3 தவறு, 1 சரி
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) கூற்று 1, 2 சரி, 3 தவறு
180. மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?
(A) மூவகை
(B) ஐவகை
(C) நான்கு
(D) ஏழு
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) மூவகை
181. தமிழ்ச்சிறுகதையில் ‘மணிக் கொடி காலம்’ எந்த தலைமுறையைச் சார்ந்தது? 
(A) முதல் தலைமுறை
(B) இரண்டாம் தலைமுறை
(C) மூன்றாம் தலைமுறை
(D) நான்காம் தலைமுறை
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) இரண்டாம் தலைமுறை
182, கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம் எது?
(A) மயிலாட்டம்
(B) காவடியாட்டம்
(C) ஒயிலாட்டம்
(D) தேவராட்டம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) மயிலாட்டம்
183. கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்
(A) சைவத்திறவு
(B) நாயன்மார் வரலாறு
(C) மனுமுறை கண்ட வாசகம்
(D) தமிழ்ச்சோலை
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) மனுமுறை கண்ட வாசகம்
184. ‘விளக்குகள் பல தந்த ஒளி’ என்னும் நூலை இயற்றியவர்
(A) ஜவஹர்லால் நேரு
(B) லிலியன் வாட்சன்
(C) கீட்ஸ்
(D) வோர்ட்ஸ் வொர்த்
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) லிலியன் வாட்சன்
185. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் பெருமையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் 
(A) மண்ணும் மக்களும்
(B) புயலிலே ஒரு தோணி
(C) கடற்புரத்தில்
(D) தீவுக்கரை
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) புயலிலே ஒரு தோணி
186. ‘தமிழ் நாடகக்கலையின் பெர்னாட்ஷா‘ என்று அறிஞர் அண்ணா யாரால் பாராட்டப் பெற்றார்?
(A) திரு.வி. கலியாண சுந்தரனார்
(B) கலைஞர் கருணாநிதி
(C) கல்கி
(D) மு. வரதராசனார்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (C) கல்கி 
187. புறப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?
(A) நாலடியார்
(B) முதுமொழிக்காஞ்சி
(C) ஏலாதி
(D) பழமொழி
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) முதுமொழிக்காஞ்சி
188. வெண்குடை – இலக்கணக் குறிப்பு தருக
(A) ஆகுபெயர்
(B) வினைத்தொகை
(C) தொழிற்பெயர்
(D) பண்புத்தொகை
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) பண்புத்தொகை
189. திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்
(A) கணிமேதாவியார்
(B) கம்பர்
(C) நல்லாதனார்
(D) இளங்கோவடிகள்
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) நல்லாதனார் 
190. சிருங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?
(A) நந்திவர்மன்
(B) குகன்
(C) அப்பூதியடிகள்
(D) சிபி
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) குகன் 
191. ‘அனகன்‘ என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?
(A) வீடணன்
(B) இராமன்
(C) சுக்ரீவன்
(D) குகன்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (B) இராமன் 
192. யாழின் வகைகள் யாவை? 
(A) 4
(B) 5
(C) 6
(D) 7
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) 4
193, “குடிமக்கள் காப்பியம்“- எனப்படுவது
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) சீவக சிந்தாமணி
(D) வளையாபதி
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) சிலப்பதிகாரம்
194. ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’

இப்பாடலில் பயின்று வரும் அணி?
(A) தீவக அணி
(B) வஞ்சப்புகழ்ச்சி அணி
(C) தற்குறிப்பேற்ற அணி
(D) உவமையணி
(E) விடை தெரியவில்லை
  விடை : (C) தற்குறிப்பேற்ற அணி
195. உமறுப்புலவர் எழுதிய வேறு நூல்
(A) திணைமாலை
(B) முதுமொழிமாலை
(C) கார்நாற்பது
(D) இனியவை நாற்பது
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) முதுமொழிமாலை
196, பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
(A) நம்மாழ்வார்
(B) பெரியாழ்வார்
(C) ஆண்டாள்
(D) குலசேகராழ்வார் 
(E) விடை தெரியவில்லை
  விடை : (D) குலசேகராழ்வார் 
197. இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்
(A) உவமை அணி
(B) சிலேடை அணி
(C) உருவக அணி
(D) தற்குறிப்பேற்ற அணி
(E) விடை தெரியவில்லை
  விடை : (B) சிலேடை அணி
198. மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது ?
(A) சிவகாமியின் சரிதம்
(B) சிவகாமியின் செல்வன்
(C) சிவகாமியின் வரலாறு
(D) சிவகாமியின் சபதம்
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) சிவகாமியின் சரிதம்
199. ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி சுந்தரனார் மனோன்மனியம் நாடகத்தை எழுதிய ஆண்டு 
(A) 1891
(B) 1881
(C) 1871
(D) 1901
(E) விடை தெரியவில்லை
  விடை : (A) 1891
200. ‘உலகம் நிலையற்றது’ எனப் பாடிய சித்தர்
(A) இடைக்காட்டுச் சித்தர்
(B) குதம்பைச் சித்தர்
(C) பட்டினத்தார்
(D) சிவவாக்கியர்
(E) விடை தெரியவில்லை 
  விடை : (B) குதம்பைச் சித்தர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top