TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு-டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அதிரடி

தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மார்ச் 30 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக குரூப்-4 தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும்டி.என்.பி.எஸ்.சி தலைவர்.                                                          
குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும்.
குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் – பாலச்சந்திரன்.

Pdf சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்- டிஎன்பிஎஸ்சி

* டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறையை கொண்டு வரப்பட்டுள்ளது.

* இனி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்களை PDF வடிவில் பதிவேற்றப்பட வேண்டும்.

* விண்ணப்பிக்கும் போது சான்றிதழ் பதிவேற்றத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக OTR கணக்கு மூலமாக திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது.

* விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில் தேர்வுக்குப் பின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

* மேலே குறிப்பிட்டுள்ள வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரிய செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.
ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்.
தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரனின் இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் திளைத்துப் போய் இருக்கிறார்கள்.

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top